விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய 6வது முறையாக கால அவகாசம் 6 மாதத்திற்கு நீட்டிப்பு : தமிழக அரசு

சென்னை: விதிமீறல் கட்டடங்களை வரன்முறை படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாை மனைகள் மற்றும் கட்டிடங்களை வரன்முறை செய்ய நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தில் 113 சி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி 2007 ஜூலைக்கு முன்பு கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டமானது,

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வந்தது. இதற்கான கால அவகாசம் தொடர்ந்து 5 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 6வது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த கால அவகாசம் கடந்த டிசம்பர் 25ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது 6வது முறையாக கால அவகாசத்தை நீட்டித்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆறு மாதத்தில் விதி மீறிய கட்டடங்களை வரன்முறை படுத்த விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: