திருவள்ளூர்: அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டையொட்டி திருப்படித் திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது. புத்தாண்டையொட்டி இரண்டு நாட்கள் நடைப்பெறும் இவ்விழாவிற்காக பக்தர்கள் கோவில் படிகளுக்கு மலர் அலங்காரம் செய்து அரோகரா முழக்கத்துடன் வழிபாடு மேற்கொண்டனர். ஓர் ஆண்டை குறிக்கும் வகையில் கோவிலில் அமைந்துள்ள 365 படிகளுக்கும் மஞ்சள், குங்குமம் பூசி பக்தர்கள் திருப்புகழ் பாடினர். விழா தொடங்கியதைத் தொடர்ந்து திருப்பதி, சென்னை, வேலுார், காஞ்சிபுரம், வல்லக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து, வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பக்தர்கள் வருவர்கள்.
திருத்தணி முருகன் கோவிலில் திருப்படித் திருவிழா: புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு
- திருப்பாடி திருவிழா
- திருப்பி முருகன் கோயில்: புத்தாண்டு தினத்தில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு திருப்பணி முருகன் கோயில்
- திருப்பாடி திருவிழா: புத்தாண்டு ஈவ்