திருநெல்வேலி: திருநெல்வேலியை சேர்ந்த இலக்கிய பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நெல்லை கண்ணன் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் கடந்த 29-ஆம் தேதி பங்கேற்றார். அந்த நிகழ்வில் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஒருமையில் பேசியதோடு அவர்கள் இருவரையும் கொலை செய்ய தூண்டும் வகையிலும் நெல்லை கண்ணன் பேசுவது போன்ற காணொளி இணையதளத்தில் வைரலானது. இது பல்வேறுத் தரப்பிலும் அதிர்ச்சிக்கும், கண்டனத்திற்கும் உள்ளான நிலையில் நெல்லை கண்ணனுக்கு எதிராக பாஜகா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளனர்.