சென்னை: 30 ஆண்டுகாலமாக ரயில் விபத்து, தற்கொலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பவர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார். அப்போது மு.க.ஸ்டாலின் அரசு பணி கிடைக்க உதவுவதாக உறுதியளித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ரயில் விபத்துகள், தற்கொலைகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியை மேற்கொள்ளும் முருகன் என்பவர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர். இது தொடர்பாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ரயில் விபத்துகள், தற்கொலைகளில் உயிரிழந்த உடல்களை மீட்கும் பணியை தனது வறுமைச் சூழலிலும் 30 ஆண்டுகளாகச் செய்து வரும் மகத்தான மனிதர் முருகனை, நேரில் வரவழைத்துச் சந்தித்தேன்.