கோஹிமா: நாகாலாந்து மாநில தேசியவாத ஜனநாயக வளர்ச்சி கட்சி (என்டிபிபி) தலைவராக இருந்தவர் விகோ யோசூ (67). இவருக்கு மனைவியும், 10 குழந்தைகளும் உள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.