திருவனந்தபுரம்: கேரளாவில் முதியோர் இல்லத்தில் காதலித்த 67 வயதான லட்சுமி அம்மாள் என்பவரும் திருமணம் செய்து கொண்டனர். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ராமவர்மபுரத்தில் முதியோர் இல்லம் உள்ளது. இது அரசால் நடத்தப்படுகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.அவர்களுள் கோச்சானியன் (67), லட்சுமியம்மாள் (66) ஆகியோர் தங்கியிருந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு தற்போது திருமணம் நடந்துமுடிந்துவிட்டது.