குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடத்திய 25,000 பேர் மீது வழக்குப்பதிவு

தென்காசி: தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய 25 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தென்காசியில் 2 ஆயிரம் பேர், புளியங்குடியில் 5 ஆயிரம் பேர், கடையநல்லூரில் 5 ஆயிரம் பெண்கள் உள்பட 12 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: