மெட்ரோ ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்களின் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி

சென்னை: பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகள் மத்தியில் இசை ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கடந்த 14ம் தேதி இசை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது. பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.   இதேபோல், மெட்ரோ ரயில் நிலையங்களில் இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு பலகைகளையும் நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று அசோக்நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட டிரம்ஸ் இசை  நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் டிரம்ஸ் இசைத்தனர். இதைத்தொடர்ந்து ஜனவரி 1ம் தேதி வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் பறை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

Related Stories: