சேலம் : சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்துக்கு குடும்பத்துடன் வந்த முதல்வர் பழனிசாமி, மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.மகன் மிதுன்குமார், மருமகள் சங்கீதா, மனைவி ராதாவுடன் சென்று முதல்வர் பழனிசாமி வாக்களித்தார்.