சென்னை: சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் மற்றும் கூறினார். இதுகுறித்து அவர், சங்க நிர்வாகிகள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர் பணிநியமனம் என்பது கவுன்சிலிங் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படுகிறது. பணி அனுபவம் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது மருத்துவக் கல்வி இயக்ககம் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் மூலம், தற்காலிகமாக கவுரவப் பேராசிரியர்களை பணிநியமனம் செய்து கொள்ளவும், அவ்வாறு நியமிக்கப்பட உள்ள பேராசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.