கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் புதர்கள் நடுவே சுடுகாடு உள்ளதால் சடலத்தை அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்காக மங்காவரம் செல்லும் வழியில் சுடுகாடு உள்ளது. தற்போது இந்த சுடுகாட்டை பராமரிக்காமல் விட்டுவிட்டதால் புதர்கள் மண்டி சுகாதாரமற்ற முறையில் உள்ளது. ஆங்காங்கே குப்பை குவிந்துகிடப்பதால் சடலத்தை கொண்டு செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.