ஆவடி: பட்டாபிராம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி செய்துதராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பயணிகள் எச்சரித்துள்ளனர். சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் ஆவடி அருகே பட்டாபிராம் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வேலை நிமிர்த்தமாக வந்து செல்கின்றனர். ஆனால் ரயில் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது; பட்டாபிராம் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் உள்ளன. 1வது, 2வது நடைமேடையில் பயணிகள் அமர்வதற்கு நிழற்குடை வசதிகள் இல்லை. குடிநீர் தொட்டிகளில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. மின் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து கிடக்கிறது. 2வது நடைமேடையில் இருந்து 3வது நடைமேடைக்கு செல்லும் பாதை வசதி இல்லை. 3வது நடைமேடையில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.