மீண்டும் சரசரவென உயர்ந்த தங்கத்தின் விலை : சவரன் 112 ரூபாய் உயர்ந்து ரூ.29,320-க்கு விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் விலையேற்றம் நீடிப்பதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தங்கத்தோடு வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (டிசம்பர் 24) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3665 ஆக உள்ளது. நேற்று 3,651ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல, நேற்று 29,208 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 112 ரூபாய் உயர்ந்து 29,320-ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 தூய தங்கத்தின் விலை

24 கேரட் தூய தங்கத்தின் விலை சென்னையில் கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று அதன் விலை ரூ.3,847 ஆக இருக்கிறது. நேற்று 3,833 ரூபாய்க்கு விற்பனையானது.8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 30,664 ரூபாயிலிருந்து இன்று 30,776 ரூபாயாக உயர்ந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் 112 ரூபாய் உயர்ந்துள்ளது.

வெள்ளியின் விலை!

சென்னையில் இன்று வெள்ளியும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.48.80லிருந்து ரூ.49.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.49,300 ஆக இருக்கிறது.

Related Stories: