தானியங்கி கேமரா பொருத்த சென்ற வனக்காப்பாளர் யானை தாக்கி பலி

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே கீழ்முடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (46).பவானிசாகர் வனக்காப்பாளர். நேற்று மதியம் இவர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மோகன், மாதன், ரமேஷ் ஆகியோருடன் கொத்தமங்கள் வனப்பகுதியில் அருளப்பன்கிணறு என்ற இடத்தில் தானியங்கி கேமரா பொருத்தி கொண்டிருந்தார். அப்போது புதர்மறைவில் இருந்த ஒற்றை யானை  துரத்தியது. 4 பேரும் யானையிடம் இருந்து தப்பி ஓடியபோது வனக்காப்பாளர் மகேந்திரனை துரத்திப்பிடித்து மிதித்துக்கொன்றது. இது குறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: