அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா: இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு

சென்னை: அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா சென்னை, கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள நேர்ச்சைத் திருத்தலம், புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பேராயர்கள், பங்குத் தந்தையர் மற்றும் கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ நிர்வாகிகள் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றனர்.  

அதனைத் தொடர்ந்து, தேவாலயத்தில் இரண்டு நிமிடம் பிரார்த்தனை செய்த பின்பு, தேவாலயத்தை சுற்றிப் பார்த்து அதன் சிறப்புகளை அறிந்து கொண்டனர். கருணை இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுடன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தனர். மேலும், கிறிஸ்துமஸ் பரிசாக அங்கிருந்தவர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் கேக் வழங்கி உபசரித்ததோடு, முதியோர்களுடனும், பேராயர்களுடனும், அருட்சகோதரிகளுடனும் கிறிஸ்துமஸ் உணவு உண்டனர்.

Related Stories: