ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் நான்கு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், கடந்த 20ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருப்பதை காட்டுகின்றன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 42 இடங்களை பெற வேண்டும் என்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மூலம் சராசரியாக காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 38 முதல் 50 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இப்போதைய ஆளும் பாஜ 22 முதல் 32 இடங்களில் வெற்றிக் பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.