திருத்துறைப்பூண்டி : வெங்காய தாமரை மண்டிக்கிடக்கும் நேமம் வடிகால் வாய்க்காலை விவசாயிகளே தூர்வாரினர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் ஊராட்சி நேமம், இளநகர் கிராமத்தில் 500 ஏக்கர் சாகுபடி நிலம் உள்ளது.
விவசாய நிலங்களில் மழை வெள்ள நீர் வடிய வேண்டிய நேமம் வடிகால் வாய்கால் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகி விட்டது. கடந்த ஆண்டு தாக்கிய கஜா புயலில் வடிகால் வாய்காலில் விழுந்த மரங்கள் எதுவும் அகற்றபடவில்லை இதனால் தண்ணீர் வடியாமல் உள்ளது. நேமத்தில் இருந்து நெடும்பலம் செல்லும் 12 கிலோ மீட்டர் வடிகால் வாய்கால் தூர்வார பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் விவசாயிகள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.