மதுரை: கடல் பரப்பில் நடக்கும் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டப்பிரிவை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை அவகாசம் அளித்துள்ளது. மதுரை, குட்ஷெட் தெருவைச் சேர்ந்த ரமீஸ் அஜ்மல்கான், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடல் வழி பயணம் மற்றும் கடல் திட்டுகள் மீதான சட்ட விரோத செயல்களுக்கான சட்டத்தின் ஒரு பிரிவில், கொலை குற்றங்களுக்கு மரண தண்டனை மட்டுமே வழங்கப்படுகிறது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனைவரும் சமம் என்பதையும், தனி மனித உரிமையை மீறும் வகையிலும் உள்ளது. அதே நேரம் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறிக்கும் விதமாகவும் உள்ளது. பல்வேறு வழக்குகளில் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்று உள்ளது.