சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான 2 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் ஜெயந்த் (15). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விடுமுறை நாள் என்பதால், இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சாய்குமார், மேலும் 4 பேருடன் மெரினா கடற்கரை சென்றார். அங்கு சிலர் கடலில் இறங்கி குளிப்பதை பார்த்ததும் 6 பேரும் கடலில் இறங்கி குளிக்க முடிவு செய்தனர்.