பீஜிங்: அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவை சீனா நேற்று திடீரென நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் உச்சத்துக்கு சென்றதால், சீன பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதித்தது. தனது நாட்டு ஸ்டீல், அலுமினிய தொழில்களை பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுத்ததாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதை தொடர்ந்து பரஸ்பரம் இரண்டு நாடுகளும் பதிலடியாக வரிகளை விதித்து வந்தன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகியும், தீர்வு ஏற்படவில்லை. கடந்த 21 மாதங்களாக இந்த வர்த்தகப்போர் நீடித்து வருகிறது.