திருவொற்றியூர்: எர்ணாவூர் முல்லை நகர் பஸ் நிறுத்ததில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ₹5 லட்சம் செலவில் நவீன நிழற்குடை அமைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்த இந்த நிழற்குடை நேற்று முன்தினம் இரவோடு இரவாக மாயமானது. நேற்று காலை இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சரவணன், எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார், நிழற்குடையை பெயர்த்து எடுத்து சென்ற நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.