சென்னையில் ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தும் முடிவை கண்டித்து வணிகர் சங்கம் போராட்டம்

சென்னை: ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தும் முடிவை கண்டித்து வணிகர் சங்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் போராட்டத்தில் பங்கேற்ற வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தற்சார்பு கொள்கையை அரசு பின்பற்ற வேண்டும். சில்லறை வணிகத்தில் அன்னியர் ஆதிக்கம் அதிகரிக்கும். மேலும் உள்நாட்டது உற்பத்தி சரிந்துவிடும் என்று அவர் எச்சரிக்கைவிடுத்தார். இதனை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரியை 2 மடங்காக உயர்த்தும் திட்டம் அக்கிரமமானது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நம் நாட்டு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Related Stories: