சென்னை : ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய தேசிய மாணவர்கள் சங்கம், கேரளாவை சேர்ந்த முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், சென்னை ஐஐடியில் கடந்த 2006 முதல் கடந்த நவம்பர் வரை 14 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். எனவே, பாத்திமா லத்தீப் மரணம் உள்பட ஐஐடி வளாகத்தில் நடந்த மர்ம மரணங்கள் தொடர்பாக விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதில் ஒரு வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோரும் மற்றொரு வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோரும் தனித்தனியாக விசாரித்தனர். இந்த வழக்குகளின் தீர்ப்புகளை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். இரு தீர்ப்புகளிலும் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: