அண்ணாநகர், அமைந்தகரை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர், திருமங்கலம், அமைந்தகரை ஆகிய பகுதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள், தள்ளுவண்டி உணவகங்கள் மற்றும் கடைகளின் முகப்பு கூரை, விளம்பர பலகைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தன. இதனால், பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், மண்டல அலுவலர் சுந்தரராஜன், செயற்பொறியாளர் சேகர், போக்குவரத்து உதவி கமிஷனர் சுரேந்திரநாத் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மேற்கண்ட இடங்களில் ஆய்வு நடத்தி, நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த தள்ளுவண்டி கடைகள், விளம்பர பலகைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர்.

Related Stories: