சென்னை: பாரம்பரிய நீராவி ரயில் இன்ஜின் நாளை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரிலிருந்து காலை 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 12.15 மணிக்கு கோடம்பாக்கம் சென்றடையும். மறு மார்க்கத்தில் மதியம் 12.45 மணிக்கு கோடம்பாக்கத்தில் புறப்பட்டு 2 மணிக்கு எழும்பூர் வந்தடையும். 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் ஒரு மார்க்கத்தில் பயணம் செய்ய 300, இரண்டு மார்க்கத்தில் பயணம் செய்ய ₹600 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உணவுகளுடன் சேர்த்து ஒரு மார்க்கத்திற்கு 565, இரண்டு மார்க்கத்திற்கு 865 கட்டணம் செலுத்த வேண்டும்.