சென்னை: 50வது பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள், புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் என கூறினார். ராக்கெட்டை ஏவ அல்லும், பகலும் அயராது பாடுபட்ட இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள், என பழனிசாமி வாழ்த்தியுள்ளார்.