சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வரும் 14ம்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, முன்னாள் எம்எல்ஏ கோ.பழனிசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் சி.மகேந்திரன், மு.வீரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆறுமுகம், பெரியசாமி, சிவபுண்ணியம், பத்மாவதி, ராமசாமி, முன்னாள் எம்பிக்கள் அழகர்சாமி, பொ.லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் வரும் 14ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
- இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- தமிழ்நாடு
- இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர்கள் சந்திக்கின்றனர்