சென்னை: ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்ட வழக்கில் நடிகர் சிம்பு மீண்டும் மனுத்தாக்கல் செய்ய சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இணையதளங்களில் சிம்பு பற்றி அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிகளை எதிர்மனுதாரராக இணைத்து மீண்டும் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.