அண்ணாநகர்: அண்ணாநகரில் சென்டர்மீடியனில் கார் மோதி நொறுங்கியது. இந்த கார் மீது அடுத்தடுத்து வந்த 2 பைக்குகளும் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவ மாணவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் ரோஷன் (24). இவர், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு மருத்துவ கல்வி பயின்று வருகிறார். நேற்றிரவு 10 மணியளவில் மருத்துவமனையில் பயிற்சி பணியை முடித்து விட்டு, காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அண்ணா நகர் சாந்தி காலனி அருகே வந்தபோது, சென்டர் மீடியனில் பயங்கரமாக கார் மோதியது.