சென்னை: சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை ஒட்டி மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்கம்படி தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலிகள் மூலம் மெரினா அணுகு சாலையிலிருந்து, கடற்கரை மணற்பரப்பை கடந்து அலைகள் அருகே செல்வதை சாத்தியமாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சாய்தள பாதை அமைத்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், தங்களது சக்கர நாற்காலியில் சாய்தளம் வழியாக கடலலைகள் வரும் இடம் வரை சென்று மகிழ்ந்தனர். ஒவ்வொரு வருடமும் அந்த சாய்தளம் இரண்டு நாட்களில் சென்னை மாநகராட்சி அகற்றிவிடுகிறது.