உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 3,217 பேர் வேட்புமனு தாக்கல் : மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 3,217 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் இந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

Related Stories: