ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 2வது பட்டமளிப்பு விழா, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. மருத்துப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் அவர் பேசியதாவது: நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தரமான கல்வி, மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, கிராமப் புறங்களில் வசிப்பவர்களுக்கு இவை கிடைக்க வழி வகுக்க வேண்டும்.