கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 43 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 114 பேரும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகள் ஜெசிந்தா மேரி (5). இவருக்கு காய்ச்சல் இருந்ததால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.