சென்னை: உலக அழகிப்போட்டியில் பங்கேற்க சென்னையை சேர்ந்த திருநங்கை ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். மிஸ் கிராண்ட் ஸ்டார் இன்டர்நேஷனல் திருநங்கைகளுக்கான அழகி போட்டி ஸ்பெயின் பார்சிலோனா நகரில் 8ம் தேதி (நாளை) முதல் 14ம் தேதி வரை நடக்கிறது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து 30 திருநங்கைகள் பங்கேற்பார்கள். இந்த போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நமீதா கலந்து கொள்கிறார். இதற்காக அவர், சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1.50 மணிக்கு ஸ்பெயின் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியாவில் இருந்து இதுவரை எந்த திருநங்கைகளும் பங்கேற்காத சர்வதேச போட்டியில், நான் கலந்துகொள்ள இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இனி வருடம்தோறும் இந்தியா சார்பில் திருநங்கைகள் பங்கேற்பார்கள் என நம்பிக்கை உள்ளது.