சென்னை: இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தை போல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில், நாகப்பட்டினத்தை சேர்ந்த 2 பேரை அப்போது கைது செய்தனர். இவர்கள் தடைசெய்யப்பட்ட “அன்சாருல்லா” என்ற பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் தமிழ்நாட்டில் பயங்கரவாத அமைப்பை காலூன்ற நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. ேலும், தங்களை போல் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் இருந்து டெல்லிக்கு நாடு கடத்தப்பட்ட 14 பேர் தங்கி இருப்பதாக கொடுத்த தகவலையடுத்து அவர்களையும் என்.ஐ.ஏ. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.