சென்னை: கரூரில் உள்ள சோபிகா இம்பெக்ஸ் கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை ஒரு மாதத்திற்கு மூடுமாறு தமிழ்நாடு வேளாண் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் திருச்சி, மதுரை, கோவை, கரூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட ஐ.டி. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் கடந்த 15ம் தேதி கரூர் சோபிகா இம்பெக்ஸ் கொசுவலை நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 30 கோடி ரூபாய் பணம் மற்றும் 10 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்நிறுவனம் 436 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
கரூர் சோபிகா இம்பெக்ஸ் கொசுவலை நிறுவனத்தை ஒரு மாதத்திற்கு மூட தமிழ்நாடு வேளாண் இயக்குநரகம் நோட்டீஸ்
- தமிழ்நாடு விவசாய இயக்குநரகம்
- மூடல்
- கரூர் சோபிகா இம்பெக்ஸ் கொசு நிறுவனம்
- கருர் சோபிகா இம்பெக்ஸ் கொசு நிறுவனம்