சென்னை: தமிழக பொதுப்பணித்துறை முக்கிய ஒப்பந்ததாரரும், திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக கோயில்கள் தலைவருமான சேகர் ரெட்டியின் அலுவலகம், தி.நகர் விஜயராகவா சாலையில் உள்ளது.3 அடுக்குமாடி கொண்ட இந்த கட்டிடத்தில் நேற்று காலை 8 மணிக்கு திடீரென 3வது மாடியில் இருந்து கரும் புகை ெவளியேறியது. இதை பார்த்தவர்கள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் தீ மளமளவென 3 வது மாடி முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து உடனே தேனாம்ேபட்டையில் இருந்து 54 மீட்டர் நீளம் கொண்ட ஸ்கை லிப்ட் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் 3 வது மாடியில் இருந்த தீயை வீரர்கள் அணைக்க முயன்றனர்.