சென்னை: கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் நீர்நிலைகளில் எத்தனை பேர் மூழ்கி இறந்துள்ளனர், இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் கோட்டீஸ்வரன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் பெரும்பாலான நீர்நிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதனால், தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இந்த பகுதிகளில் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களை நியமித்து நீரில் மூழ்குபவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவொற்றியூர் முதல் மகாபலிபுரம் வரை கடலோரத்தில் தடுப்புச்சுவர் கட்டவேண்டும். இதுகுறித்து உரிய நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.