போதைப்பொருள் வைத்திருந்த மாணவன் உள்பட 4 பேர் கைது : கார் பறிமுதல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு எண்ணூர் விரைவுச்சாலை, ஒண்டிகுப்பம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 4 பேரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருள் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், குன்றத்தூரை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (25), அண்ணாநகரை சேர்ந்த கல்லூரி மாணவன் தாமோதரன் (20), அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரின்ஸ் (24), சூளைமேடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் நான்கு பேரும் நண்பர்கள். இரு தினங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு காரில் சென்று அங்கிருந்து திரும்பி வரும்போது ஹெராயின் வாங்கி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 28 பாக்கெட் ஹெராயின் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: