கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி சாலையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று 50 ஆண்கள் மற்றும் 250 பெண் செவிலிய உதவியாளர்கள் திரண்டு, தங்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்குமாறு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு விரைந்து வந்து அவர்களது கோரிக்கைகள் குறித்து விசாரித்தார். உங்களது கோரிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுங்கள், அதனை அரசுக்கு தெரிவிப்பதாக கூறினார்.