சென்னை: டிச.3, 4ம் தேதிகளில் தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழையானது தற்போது வலுவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 17 இடங்களில் கனமழையும், 3 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. அதேபோல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.
டிச.3, 4ம் தேதிகளில் தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி
- இடி மின்னலுடன் கூடிய மழை
- பகுதிகளில்
- பாலசந்திரன்
- தமிழ்நாடு
- சென்னை வானிலை ஆய்வு
- இடங்கள்
- சென்னை
- பாலச்சந்திரன் நேர்காணல்
- என்று வானிலை ஆய்வு மைய
- பாண்டிச்சேரி