கீழ்ப்பாக்கம்: ஆட்டோவில் நைசாக ஏற்றிச் சென்று மூதாட்டியிடம் 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பிய 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ஷெனாய் நகர், வெங்கடாசலம் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி (70). இவரது மகன் குமார் (48), சிறுநீரக பாதிப்பு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க, நேற்று முன்தினம் மாலை ரங்கநாயகி மருத்துவமனைக்கு புறப்பட்டார். இவர், பஸ்சுக்காக காத்திருந்தபோது, ஒரு ஆட்டோ வந்தது. அதிலிருந்து இறங்கிய 3 பெண்கள், ரங்கநாயகியிடம் ‘‘இந்த நேரத்தில் பஸ் குறைவாகவே இயக்கப்படும். வயதான காலத்தில் நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள். வாருங்கள் நாங்கள் ஆட்டோவில் அழைத்து செல்கிறோம்,’’ என தெரிவித்தனர். இதை அவர் நம்பி, அவர்களுடன் ஆட்டோவில் புறப்பட்டார்.