பால்முறை திருவிழா

சென்னை கே.கே.நகர் கிழக்கு வன்னியர் தெருவில் உள்ள ஸ்ரீமன் அய்யா நாராயணசுவாமி வைகுண்டர் திருப்பதி ஆலயத்தில் 27ம் ஆண்டு பால்முறை திருவிழாவும், திருஏடு வாசிப்பு விழாவும் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, தினமும் காலை, மாலையில் திருஏடு வாசிப்பு, பால் பணிவிடை உகபடிப்பு, மதியம் உச்சிபடிப்பு, இன்று திருக்கல்யாண திருவிளக்கு ஏற்றுதல், மகளிருக்கு புடவை வழங்குதல், 30ம் தேதி இகனை கல்யாணம், 1ம் தேதி காலை 5 மணிக்கு கடல் தீர்த்த ஆடச் செல்லுதல், மாலை வைகுண்ட சுவாமிக்கு பட்டாபிஷேகம், அன்னதானம் வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்

Related Stories: