மதுரை: மனுதாரர்களே ஆஜராகி வாதிடுவதை கட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை, ரத்து செய்யக்ேகாரிய மனுக்கள் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், நெல்லை கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல் ஆகியோர், தனித்தனியே ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:பொதுநலன் கருதி சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்காக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளோம். இதில், நாங்களே ஆஜராகி வாதிடுகிறோம். இதை கட்டுப்படுத்தும் வகையில் நவ. 4ல் நீதித்துறை சார்பில் ஓர் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பொதுநலன் சார்ந்த பிரச்னைகளுக்காக, எங்களால் வழக்கு தொடர்ந்து உடனுக்குடன் தீர்வு காண முடியாது.