மதுரை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடந்த பணி நியமன முறைகேடு குறித்து பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த முருகேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் யூஜிசி விதிகளுக்கு மாறாக கடந்த 2017-18ல் லஞ்சம் பெற்றுக்கொண்டு பல நியமனங்கள் முறைகேடாக நடந்துள்ளன. எனவே, பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் உள்ளிட்ட பணி நியமன முறைகேடு குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.இதேபோல், தஞ்சாவூரைச் சேர்ந்த நெடுஞ்செழியன் தாக்கல் செய்த மனுவில், ‘‘சட்டவிரோத பணி நியமனங்கள், பதவி உயர்வு மற்றும் தகுதி உயர்வு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து உரிய நடவடிக்ைக எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.