சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம், சீரியல் எடுப்பதை எதிர்த்து சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஜெ.தீபாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும் இயக்குநர் விஜய் திரைப்படம் எடுத்து வருகிறார். ஜெயலலிதாவாக நடிகை கங்கணா ராவத் நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.இதேபோல் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவை மையப்படுத்தி நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து இணையதள சீரியல் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.