தமிழகம் முழுவதும் போட்டியிட பாஜ விரும்புகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் பாஜ போட்டியிட விரும்புகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். முன்னாள் மத்திய பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் இருந்து நேற்று பிற்பகல் 2.30 மணி விமானத்தில் சென்னை வந்தார். அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜவை பொறுத்தமட்டில் உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் போட்டியிட விரும்புகிறது. அதற்கான ஆயத்தப்பணிகளில் கட்சி ஈடுபட்டுள்ளது. பாஜ தனித்துப்போட்டியிடுமா, கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பதை அகில இந்திய தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். அதுகுறித்து நான் கருத்து எதுவும் சொல்ல முடியாது.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் அந்தந்த இடங்களில் உள்ள கள நிலவரத்தை கண்டு அதற்கு ஏற்றவாறு செயல்படுவோம். கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும். நடிகர் ரஜினி வந்தால் அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று குருமூர்த்தி கூறியுள்ளது தமிழகத்தில் நல்ல ஒரு அரசாங்கம் வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார். எனவே அவர் தமிழகத்தின் நலன் விரும்பியதால் அவருடைய கருத்தை கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: