சென்னை: தமிழகம் முழுவதும் பாஜ போட்டியிட விரும்புகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். முன்னாள் மத்திய பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் இருந்து நேற்று பிற்பகல் 2.30 மணி விமானத்தில் சென்னை வந்தார். அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜவை பொறுத்தமட்டில் உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் போட்டியிட விரும்புகிறது. அதற்கான ஆயத்தப்பணிகளில் கட்சி ஈடுபட்டுள்ளது. பாஜ தனித்துப்போட்டியிடுமா, கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பதை அகில இந்திய தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். அதுகுறித்து நான் கருத்து எதுவும் சொல்ல முடியாது.