திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் குபேரன் கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையாரை தேவர்கள் வலம் வந்து வழிபட்டதாக புராணம் தெரிவிக்கிறது. இவ்வாறு அக்னி முதல் ஈசான்ய லிங்கம் வரை தேவர்கள் வழிபட்ட லிங்கங்களாக விளங்குகின்றன. செல்வத்தின் அதிபதியான குபேரன் கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று, குபேர பட்டணத்தில் இருந்து பூமிக்கு வந்து, திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தபோது, அவருக்கு லிங்கம் சுயம்புவாக தோன்றி காட்சி தந்ததாக கூறப்படுகிறது. அதற்கு பூஜை செய்து குபேரன் வழிப்பட்டதால் கிரிவலப்பாதையில் 7வதாக உள்ள இந்த லிங்க திருமேனி குபேர லிங்கம் என்று அழைக்கப்படுகிறது.