சென்னை: மாநகராட்சி சார்பில் டெங்கு நோய் தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மிதிவண்டி தொடர் ஓட்டத்தை ஆணையர் பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி மற்றும் கிண்டி ரேஸ் கிளப் டி டேபிள் பிரண்ட்ஸ் சார்பில் கிண்டி ரேஸ் கிளப் மைதான வளாகத்தில் இருந்து மகாபலிபுரம் வரை சுமார் 50 கி.மீ., பயணதூரம் கொண்ட டெங்கு நோய் தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி தொடர் ஓட்டத்தை ஆணையர் பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த மிதிவண்டி தொடர் ஒட்டத்தில் கலந்து கொண்டவர்கள் டெங்கு நோய் தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மிதிவண்டிகளில் ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.