பெரம்பூர்: வியாசர்பாடியில் 30ம் ஆண்டு சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர தோழி அமைப்பும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து நேற்று முன்தினம் மாலை குழந்தைகள் உரிமை பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி கலந்து கொண்டு இப்பேரணியை துவக்கி வைத்தார். இதில் வியாசர்பாடியை சுற்றியுள்ள குடிசை பகுதி குழந்தைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.